Sunday, July 7, 2013

ஒரு பொய்


ஒரு பொய் 

ஒரு பொய் 
என் நெஞ்சைப் பிளந்தது 
அதைப் புன்முறுவலுடன் 
ஏற்றுக்கொண்டேன் 

என் கண்களை 
அழக்கூடாது என்று 
கேட்டுக்கொண்டேன்
ஆனால் 
விழித்திரையின் 
வேறொரு பக்கமிருந்து 
கண்ணீர் பொத்துக்கொண்டது 

ஒரு குற்றச்சாட்டு 
வேரறுந்த கொடியின் 
நுனிக் கொழுந்து போல் 
என்னை ஆக்கிவிட்டது 

ஒரு மின்னல் ரம்பம் 
என்னை இரண்டாக 
வகிடு எடுத்தது  
நான் 
மன்புழுவாய்த் துடித்தேன் 

நான்கைந்து கத்திகள் 
அடிவயிற்றில் இறங்கியது
நானோ 
இன்னும் ஆழமாக 
குத்தச் சொல்லி மன்றாடினேன் 

ஒரு துரோகத்தைக் கொண்டாடி 
அதை வென்று எடுத்தேன் 

ஆனால் 
இந்தக் கண்ணீர் மட்டும் 
எங்கிருந்து வருகிறது 
என்று தெரியவில்லை 

கண்களில் இருந்து 
வருவது மட்டுமே 
கண்ணீர் அல்ல  

இறந்து போவது மட்டுமே 
இறப்பும் அல்ல 

#
வே.ராமசாமி 

contact